Latest News :

ராதிகா ஆப்தேவின் கவர்ச்சிப் புகைப்படங்களுக்கு பலன் கிடைத்தது!
Monday April-16 2018

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் ‘கபாலி’ படத்திற்குப் பிறகே பிரபலமானார். இருந்தாலும், இவர் நடித்து பிரபலமானதை விட அவ்வபோது சர்ச்சையான கருத்துக்கள் கூறியே அதிக பிரபலமானார்.

 

அவரது சர்ச்சை கருத்துக்கள் போல, அவரது கவர்ச்சியான புகைப்படங்களும், வீடியோக்களும் அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்தும். அவ்வாறு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ராதிகா ஆப்தே அதற்கான பலனை தற்போது பெற்றுவிட்டார்.

 

ஆம், ராதிகா ஆப்தே ஹாலிவுட் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘வேல்ட் வார் 2’ என்று தயாராகும் ஹாலிவுட் படத்தில் உளவாளி வேடத்தில் ராதிகா ஆப்தே நடிக்கிறார். இரண்டாம் உலகப் போர் பற்றிய படமான இப்படத்தில், ரகசிய உளவாளியாக செயல்பட்ட நூர் இனயத் கான் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். நூர் இனயத் கான் தந்தை இனயத் கான் இந்தியர். திப்பு சுல்தான் பரம்பரையை சேர்ந்தவர். தாய் பிரானி அமினா பேகம் அமெரிக்காவை சேர்ந்தவர்.

 

லண்டனில் வசித்து வந்த நூர் இனயத், இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, பிரிட்டனின் ரகசிய உளவாளியாக வேலை பார்த்தார். பிரான்சை ஜெர்மனி கைப்பற்றியபோது அங்கு வானொலியில் வேலை பார்த்து ரகசியங்களை சேகரித்தார். பின்னர் ஹிட்லர் படையினர் அவர் உளவாளி என்பதை கண்டறிந்து கைது செய்து 1944-ல் சுட்டுக் கொன்றனர். அப்போது நூர் இனயத்துக்கு வயது 30.

 

இவரது கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஹாலிவுட் படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதில் சாரா மேகன் தாமஸ், ஸ்டானா கேடிக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 

 

ராதிகா ஆப்தேவுக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, அவர் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்களால் தான், என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

Related News

2405

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery