Latest News :

பிரம்மாண்ட பேய் படம் மூலம் மிரட்ட வரும் பூர்ணா!
Tuesday April-17 2018

‘சவரக்கத்தி’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்ற பூர்ணா, இதுவரை பேய் படங்களில் நடித்திருக்கும் பிரபலங்களை மிஞ்சும் அளவுக்கு பேய் படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

 

தெலுங்கில் ‘ராட்சஷி’ என்ற பெயரில் வெளியான மாபெரும் வெற்றிப் படம் தற்போது தமிழில் ‘குந்தி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஹீரோயினாக நடித்திருக்கும் பூர்ணாவுக்கு இப்படம் திரையுலக வாழ்கையில் ஒரு மயில்கல், என்று பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கிறது. ஒரு பேய் தனது குழந்தைகளை கொள்ள துடித்துக் கொண்டிருக்க அந்த பேயிடம் இருந்து எப்படி குழந்தைகளை காப்பாற்றினார் என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை.

 

அருந்ததி, சந்திரமுகி, முனி, காஞ்சனா போன்ற படங்களை மிஞ்சும் அளவுக்கு உருவாகியுள்ள இப்படம் தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்டமான பேய் படமாகவும் உருவாகி வருகிறது.

 

அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசுகுமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க, எஸ்.எப்.எப் டிவி வழங்கும் ‘குந்தி’ படத்தில் பூர்ணாவுக்கு ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யூ சிங் மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

 

கர்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யஜமன்யா இசையமைக்க, எஸ்.எப்.எப் டிவி காளிராஜ், சந்திரபிரகாஷ் ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளனர். வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர் தேவன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பண்ணா ராயல் இயக்கியிருக்கும் இப்படத்தின் தமிழ் வசனம் மற்றும் ஒருங்கிணைப்பை ஏ.ஆர்.கே.ராஜராஜா செய்து வருகிறார்.

Related News

2411

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery