நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சினேகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை வளர்ப்பு நடிப்பு என்று இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் சினேகா, தற்போது தனது உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், சினேகா - பிரசன்னா ஜோடி ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது சினேகா குறித்து பேசிய பிரசன்னா, “சினேகா மட்டும் இல்லை, நான் அனைத்து பெண்களையும் அதிகம் மதிக்கிறேன். குழந்தை பெற்றெடுக்கும் போது அவர்கள் படும் வலியை நேரில் பார்த்ததால் தான். சினேகா பிரசவத்தின் போது நார்மல் டெலிவரி ஆகவில்லை. அதனால் வலியை அதிகரிக்க ஒரு ஊசி போட்டார்கள். அதை பார்த்ததும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு பெரிய நீடில்.
சும்மா தலைவலி வந்தாலே தாங்க முடியாது, ஆனால் இந்த வலியை ஒவ்வொரு அம்மாவும் எப்படி தாங்கினார்கள் என நினைத்தால் அவர்களை தெய்வமாக மதிப்போம்.” என்று தெரிவித்தார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...