வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெற்றிப் பெற்ற ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீ மேக்கில் ஜோதிகா நடிக்கிறார் என்பதும், அவருக்கு ஜோடியாக விதார் நடிக்க இருப்பதும், அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அறியாதது இப்படத்தின் தமிழ் தலைப்பு.
இப்படத்திற்கு தலைப்பு வைத்திருக்கும் படக்குழு அதனை ஒரு போட்டி மூலம் வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, இப்படத்தின் தலைப்பை யூகித்து சரியாக சொல்லுபவர்களை, இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்ல இருக்கிறார்களாம்.
இந்த படத்தின் தலைப்பு இரு வார்த்தைகளை கொண்டதாகவும், ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையதாகவும், மற்றொரு வார்த்தை எஃப்.எம் ரேடியோவின் பெயராக இருக்கும், என்றும் க்ளூவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டில் பங்கேற்பவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான விடையை சொல்பவர்களில் 10 பேர்களை தேர்வு செய்து அவர்களை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்வதோடு, அவர்கள் ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கவும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், நடிகர் நடிகை மற்றும் படக்குழுவினருடன் புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த போட்டிக்கான காலக்கெடு ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் படத்தின் தலைப்பை பிரபலம் ஒருவர் மூலம் படக்குழுவி அறிவிக்க உள்ளது.
ஆட்டத்தில் பங்குபெற நினைப்பவர்கள் இந்த லிங்கை க்ளிக் செய்யவும் : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfJq1N-sPDPy4T-dbbUJZ_dpYgkrH2DBgD-iLz7yQO19A9G3g/viewform
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...