Latest News :

”நான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் கண்டுக்க மாட்டார்” - நடிகை பேச்சால் எழுந்த சர்ச்சை
Wednesday April-18 2018

திருமணத்திற்குப் பிறக்கு சில நடிகைகள் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். அப்படியே அவர்கள் நடிக்க வந்தாலும் பெரும்பாலும் அவர்களுக்கு அக்கா, அண்ணி உள்ளிட்ட குணச்சித்திர வேடங்கள் தான் கொடுக்கப்படுகிறது. அதையும் மீறி ஒரு சில நடிகைகளுக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விடுகிறார்கள்.

 

சமீபத்தில் திருமணமான நடிகை சமந்தா கூட, திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்தாலும், ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில்லை, என்ற கண்டிஷனோடு தான் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், தான் நிர்வாணமாக நடித்தாலும், எனது கணவர் எதுவும் சொல்ல மாட்டார், என்று கூறி தமிழ் நடிகை ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

‘மூன்று பேர் மூன்று காதல்’, ‘ஜெய்ஹிந்த் 2’ ஆகிய தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் சர்வின் சாவ்லா. இந்தி, தெலுங்கு மற்றும் பஞ்சாபி என பல மொழித்திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்சய்தக்கர் என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

 

இதற்கிடையே, ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சர்வின் சாவ்லாவிடம், திருமணத்திற்குப் பிறகு முத்தக் காட்சிகளில் நடிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தவர், “என் கணவர் எனது நடிப்பு தொழிலில் என்றுமே தலையிட மாட்டார். நான் முத்தக் காட்சிகளில் நடித்தாலும் சரி, ஏன் கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடித்தாலும் சரி அவர் எதுவும் சொல்ல மாட்டார். காரணம் என்னை பற்றியும், என் சினிமா தொழிலைப் பற்றியும் அவர் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

2429

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery