கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று முன் தினம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியவை வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருக்கிறது.
இந்த போராட்டத்தின் காரணமாக கடந்த 47 நாட்களாக தமிழ் சினிமாவில் எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகமல் இருந்ததால், தற்போது ரிலிஸுக்கு ஏகப்பட்ட படங்கள் காத்திருக்கின்றன. இருந்தாலும், அவற்றை வரிசைப்படுத்தி வாரத்திற்கு மூன்று புதிய படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடித்திருக்கும் ‘மெர்க்குரி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனுடன் மேலும் சில படங்களும் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், 27 ஆம் தேதி வெளியாவதாக இருந்த ரஜினிகாந்தின் ‘காலா’ ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...