Latest News :

20 ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீசாகிறது!
Thursday April-19 2018

கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று முன் தினம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியவை வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருக்கிறது.

 

இந்த போராட்டத்தின் காரணமாக கடந்த 47 நாட்களாக தமிழ் சினிமாவில் எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகமல் இருந்ததால், தற்போது ரிலிஸுக்கு ஏகப்பட்ட படங்கள் காத்திருக்கின்றன. இருந்தாலும், அவற்றை வரிசைப்படுத்தி வாரத்திற்கு மூன்று புதிய படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடித்திருக்கும் ‘மெர்க்குரி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனுடன் மேலும் சில படங்களும் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், 27 ஆம் தேதி வெளியாவதாக இருந்த ரஜினிகாந்தின் ‘காலா’ ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related News

2431

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery