கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று முன் தினம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியவை வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருக்கிறது.
இந்த போராட்டத்தின் காரணமாக கடந்த 47 நாட்களாக தமிழ் சினிமாவில் எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகமல் இருந்ததால், தற்போது ரிலிஸுக்கு ஏகப்பட்ட படங்கள் காத்திருக்கின்றன. இருந்தாலும், அவற்றை வரிசைப்படுத்தி வாரத்திற்கு மூன்று புதிய படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடித்திருக்கும் ‘மெர்க்குரி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனுடன் மேலும் சில படங்களும் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், 27 ஆம் தேதி வெளியாவதாக இருந்த ரஜினிகாந்தின் ‘காலா’ ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...