Latest News :

வசந்த் ரவிக்கு வில்லனாகும் இயக்குநர் மிஷ்கின்!
Thursday April-19 2018

’தரமணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வசந்த் ரவி, தனது முதல் படத்திலேயே அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். தற்போது இரண்டாம் படத்திற்கு தயாரகியுள்ள அவர், அறிமுக இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

 

இயக்குநர் தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் மாதேஷ்வரன், ’இறுதிசுற்று’ படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆர்.ஏ ஸ்டுடியோஸ் சார்பாக சி.ஆர்.மனோஜ்குமார் தயாரிக்கும் இப்படம் பிரம்மாண்ட ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றையும் வித்தியாசமான வகையில் காட்டுவதற்காக திலீப் சுப்பராயண் மாஸ்டர் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகிறாரம்.  தர்புகா சிவா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து, கபேர் வாசுகி ஆகியோர் எழுதுகிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் படத்தொகுப்பு செய்கிறார். ராமு கலை துறையை கவனிக்கிறார்.

 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Related News

2434

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery