பாலியல் தொல்லைக்கு எதிராக தெலுங்கு சினிமாவில் நடிகைகள் போராடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நடிகை ஒருவரது முகத்தை நாய் கடித்துவிட்ட சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் ரீனா அகர்வால். படங்களில் சின்ன வேடங்களில் நடித்தாலும் சீரியல்களில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் இவர், அங்கு பிரபலமான நடிகையாக உள்ளார்.
இந்த நிலையில், ‘க்யா ஹால் மிஸ்டர் பாஞ்சால்’ (Kya Haal Mister Panchal) என்ற சீரியலில் நடித்து வரும் ரீனா அகர்வால், அந்த சீரியலின் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்துக்கொண்டார். அப்போது நாய் ஒன்றை வைத்து படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த போது, திடிரேன்று அந்த நாய் அவரது முகத்தை மிக மோசமாக கடித்துள்ளது.
உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முகத்தில் சில தையல்கள் போட்டதோடு, ஒரு மாதம் ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...