பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கை அழைப்பதற்கு எதிராக போராடி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நடிகைகள் பலர் படுக்கை அழைக்கும் பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசவும் தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், நடிகை ரம்யா நம்பீசன் படுக்கை அழைக்கும் பழக்கம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து ரம்யா நம்பீசன் பேசுகையில், “திரையுலகில் உள்ள சில மோசமான விஷயங்கள் பற்றி என் சக நடிகைகளும், தோழிகளும் பேசியதை நான் மறுக்கப் போவது இல்லை. அதிர்ஷ்டவசமாக நான் அந்த தொல்லைக்கு ஆளாகவில்லை.
நான் என்ன செய்கிறேன் என்பதில் தெளிவாக உள்ளேன். எனக்கு ஏதாவது பிடிக்காவிட்டால் முடியாது என்று சொல்லும் பழக்கம் உள்ளது. ஆனால் என் தோழிகள் இந்த பிரச்சினைகளை சந்தித்துள்ளனர் என்பதை நினைக்கும் போது வெட்கமாக உள்ளது.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் எனக்கு அப்படி நடக்கவில்லை என்கிறேன். இந்த பிரச்சினையை தீர்க்க இது குறித்து பேச வேண்டும். அதேபோல், இந்த பழக்கம் சினிமா துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...