ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படத்தில் ராதாரவி முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் விஜயுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தற்போது விஜய் குறித்து இவர் பேசியிருப்பதும் வைரலாகியுள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் 62 படம் குறித்து பேசிய ராதாரவி, “ஜெயலலிதாவிற்கு பிறகு நடிகர் விஜயின் வீட்டிற்கு தான் நான் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். என் பேரன் விஜய் மீது பைத்தியமாக இருப்பான். நான் ‘சுறா’ படம் நடிக்கும் போதே அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என கேட்டான். அந்த ஆசை முருகதாஸ் படத்தில் நடிக்கும் போது நிறைவேறியுள்ளது.
விஜய் இந்த மண்ணின் மைந்தர், ரசிகர்கள் ஆதரவளித்து அவர் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன். அதே சமயம், அவரின் கொள்கை பற்றி கேள்வி கேட்பதை தவிர்க்க முடியாது.” என்று கூறியுள்ளார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...