Latest News :

மன்சூரலிகானுக்காக களத்தில் இறங்கிய சிம்பு!
Saturday April-21 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டும் இன்றி திரைப்பட கலைஞர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் சீறுடையில் இருந்த போலீசார் தாக்கப்பட்டனர்.

 

இதையடுத்து, போலீசாரை தாக்கியவர்களை கைது செய்த போலீசார், அந்த சமயமத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூரலிகானையும் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், நடிகர் மன்சூரலிகானை மட்டும் விடுவிக்கவில்லை. அவர் கடந்த ஒரு வாரமாக சிறையில் இருக்கிறார்.

 

இந்த நிலையில், இன்று காலை சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் வந்த நடிகர் சிம்பு, மன்சூரலிகானை விடுவிக்க கோரி கமிஷ்னர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார்.

 

இது குறித்து நிருபர்களிடம் பேசிய சிம்பு, “காவிரி பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். போலீசாரை தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் போராட்டத்தின்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார். அதற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருப்பது முறையல்ல.

 

அவருக்கு ஆபரே‌ஷன் செய்யப்பட்டு தினமும் மருந்து உட்கொண்டு வருகிறார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். போலீசாரிடம் தவறாக நடந்திருந்தால் மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

 

அவரது குடும்பத்தினர் என்னை சந்தித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் கமி‌ஷனரை சந்தித்து முறையிட்டேன்.” என்று தெரிவித்தார்.

 

காவிரி மேலாண்மை வாரியத்திற்கான சென்னையில் நடிகர் நடிகைகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்காத சிம்பு, காவிரி விவகாரம் குறித்து தெரிவித்த கருத்தை கர்நாடக கட்சிகளும் மக்களும் ஏற்றுக்கொண்டு வரவேற்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

2448

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery