Latest News :

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை - இலங்கை பெண் சுசானா வெளியிட்ட தகவல்!
Saturday April-21 2018

நடிகர் ஆர்யாவின் திருமணத்தை மையமாக வைத்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், அமோக வரவேற்புடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக 16 பெண்கள் கலந்துக்கொள்ள இறுதியில் 3 பேர் தேர்வானார்கள். இவர்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துக்கொள்வார் என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்தாலும், அனைவரும் யூகித்தது போல, ஆர்யா யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

 

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து முதன் முறையாக பேசியுள்ளார் இலங்கை பெண் சுசானா. 

 

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலில் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்தேன் இப்போது உங்களுடைய அன்பை பெற்றிருக்கிறேன். 3 மாதம் நான் கொடுத்த உழைப்பு, நேரம் எல்லாம் வீண். ஆனால் இதிலிருந்து வெளிவந்த அடுத்த வேலையை பார்ப்பது நல்லது, உங்களுடைய அன்புக்கு நன்றி, என்று தெரிவித்துள்ளார்.

Related News

2452

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery