கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த 21 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வென்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3 ஆம் இடத்தை பிடித்தது.
இதில், தமிழக பளு தூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ் சிவலிங்கத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சதீஷ்குமாரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், அவருக்கு பரிசு ஒன்றையும் அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது என்ன பரிசு என்ற தகவலை இருவரும் வெளியிடவில்லை.
இது குறித்து சதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிறந்த மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி. பதக்கத்துடன் அன்பரை சந்தித்தேன். அவரது அரவணைப்பு மற்றும் வார்த்தைகள் என்னை நிறைய ஊக்கப்படுத்தின. உங்களது அன்பாக பரிசுக்கு நன்றி சிவகார்த்திகேயன், என்று தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...