கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த 21 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வென்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3 ஆம் இடத்தை பிடித்தது.
இதில், தமிழக பளு தூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ் சிவலிங்கத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சதீஷ்குமாரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், அவருக்கு பரிசு ஒன்றையும் அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது என்ன பரிசு என்ற தகவலை இருவரும் வெளியிடவில்லை.
இது குறித்து சதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிறந்த மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி. பதக்கத்துடன் அன்பரை சந்தித்தேன். அவரது அரவணைப்பு மற்றும் வார்த்தைகள் என்னை நிறைய ஊக்கப்படுத்தின. உங்களது அன்பாக பரிசுக்கு நன்றி சிவகார்த்திகேயன், என்று தெரிவித்துள்ளார்.
ரெவ்ஜென் பிலிம் பேக்டர் சார்பில் லெனின் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரெட் லேபில்’...
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில், போயபாடி ஶ்ரீனு எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் ‘அகண்டா 2’...
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற மற்றும் பழமையான தயாரிப்பு நிறுவனமான ஏ...