கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த 21 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வென்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3 ஆம் இடத்தை பிடித்தது.
இதில், தமிழக பளு தூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ் சிவலிங்கத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சதீஷ்குமாரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், அவருக்கு பரிசு ஒன்றையும் அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது என்ன பரிசு என்ற தகவலை இருவரும் வெளியிடவில்லை.
இது குறித்து சதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிறந்த மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி. பதக்கத்துடன் அன்பரை சந்தித்தேன். அவரது அரவணைப்பு மற்றும் வார்த்தைகள் என்னை நிறைய ஊக்கப்படுத்தின. உங்களது அன்பாக பரிசுக்கு நன்றி சிவகார்த்திகேயன், என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...