Latest News :

ஹீரோக்களால் தான் தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட்டம் ஏற்படுகிறது - ஞானவேல்ராஜா தாக்கு
Tuesday April-24 2018

அல்லு அர்ஜூன் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் படம் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’. இதில் சரத்குமார் வில்லனாக நடிக்க, அர்ஜுன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஹீரோயினாக அணு இமானுவேல் நடித்திருக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை பிரபல கதையாசிரியர் வி.வம்சி எழுதி இயக்கியிருக்கிறார்.

 

வரும் மே 4 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியாகும் இப்படத்தினை தமிழகத்தில் சக்திவேல் பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தெலுங்கு சினிமாவில் ஹீரோக்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தருவதுபோல தமிழ் சினிமாவில் தருவதில்லை. அவர்களால் தான் தமிழ் சினிமாவில் தயாராகும் படங்கள் நஷ்ட்டத்தை கொடுக்கிறது, என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “தெலுங்கு சினிமாவில் ரூ.100 வியாபாரம் ஆகும் ஒரு ஹீரோ சம்பளமாக ரூ.15 கோடி மட்டுமே வாங்குவார். அதிலும், அட்வான்ஸாக ரூ.50 வாங்கிக்கொண்டு நடிக்க வந்துவிடுவார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் ரூ.100 கோடி வியாபாரம் ஆகும் ஹீரோ சம்பளமாக ரூ.50 கோடி கேட்பதோடு அட்வான்ஸாக ரூ.10 கோடி என பெரிய தொகையை கேட்பார்கள். இதனால் தான் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் நஷ்ட்டத்தை ஏற்படுத்துகிறது.

 

தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் மேக்ஸிமம் அனைத்து படங்களும் லாபத்தை ஈட்டிவிடுகிறது. தொழிலும் சிறப்பாக இருக்கிறது. அந்த நிலை இங்கு வரவேண்டும் என்றால், ஹீரோக்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவங்க குறைந்த சம்பளம் வாங்குவதால், அங்கு படங்களை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்கள். அதனால் இந்தி டப்பிங் ரைட்ஸ் மிகபெரிய தொகைக்கு விலை போகிறது. ஆனால், தமிழ் சினிமாவில் பட்ஜெட்டில் பாதி நடிகர்களின் சம்பளமாக போய்விடுவதால், படத்தை தரமாக எடுக்க முடியவில்லை.

 

தற்போது நடைபெற்ற நடிகர்கள் சங்க கூட்டத்தில் நடிகர் கார்த்தி சம்பள குறைப்பு பற்றி பேசியிருப்பதாக கேள்வி பட்டேன். அதை நான் வரவேற்கிறேன். நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளராகவும் நான் விஷாலுக்கு கோரிக்கை வைக்கிறேன். ஒன்று இரண்டு படங்களில் நடித்த காமெடி நடிகர்கள் கூட இங்கு ஒரு நாளை 2 லட்சம் சம்பளம் கேட்கிறார்கள். அப்படி ஒரு காட்சியை, சில நடிகர்களைக் கொண்டு எடுக்க வேண்டுமானால் குறைந்தது ரூ.15 லட்சம் நடிகர்களின் சம்பளமாக கொடுக்க வேண்டியுள்ளது. அப்படி கொடுத்தால் தான் அந்த காட்சியே எடுக்க முடியும் என்றால், ஒரு படம் முழுவதும் எந்த மாதிரியான நிலை இருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்த நிலை மாறினால் தான் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும்.

 

நான் ஆந்திராவில் அலுவலகம் வாங்கி விட்டேன், இங்கே நிலமை சரியாகவில்லை என்றால், தெலுங்கு பக்கம் போகவேண்டியது தான். அங்கேயும் இதே கதையை தான் கேட்க போகிறோம், இதே படத்தை தான் பண்ண போகிறோம்.

 

‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அல்லு அர்ஜுன்னு ஏராளமான ரசிகர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். அவரது நடனத்திற்காகவே அவரது படத்தை பார்க்க ரசிகர்கள் வந்துவிடுவார்கள். இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு ரசிகர்களுக்கான படமாக உருவாகியிருக்கிறது. நிச்சயம் பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

Related News

2466

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery