Latest News :

காந்தி கணக்கில் போன 21 கோடி ரூபாய் - வருத்தத்தில் விஜய் சேதுபதி!
Tuesday April-24 2018

தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர்களில் முக்கியமானவராக உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சிறப்பான ஓபனிங்கோடு தொடர்ந்து ஹிட் படம் கொடுக்கும் இவரது சம்பளம் ரூ.10 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைத்தால் பத்து கோடி என்ன, அதைவிடவும் அதிகமாக கொடுக்கவும் சில தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும், விஜய் சேதுபதி என்னவோ கோடிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், கதை பிடித்து விட்டால், சம்பள குறைப்பும் செய்துக்கொள்வதாக கூறப்படுகிறது. 

 

இதற்கிடையே, நடிகர்கள் வாங்கும் சம்பளத்தால் தான் தமிழ் சினிமாவில் எந்த திரைப்படமும் லாபத்தை ஈட்ட முடியவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ஞனானவேல்ராஜா கூட, தமிழ் சினிமாவில் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தினால் தான் இண்டஸ்ட்ரியே நஷ்ட்டமடைவதாகவும், இதே நிலை நீடித்தால் தான் தெலுங்கு சினிமாவுக்கு இடம்பெயர முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

 

இந்த நிலையில், சமீபத்தில் சம்பள குறைப்பு குறித்து விவாதிக்க நடிகர்கள் சங்கம் சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், படம் தொடங்கும் போது குறிப்பிட்ட சதவீதத்தை சம்பளமாக பெற்றுக்கொண்டு பிறகு படம் முடிந்த பிறகு மீதி சதவீத சம்பளத்தை நடிகர்கள் பெற்றுகொள்ளலாம், என்று யோசனை கூறப்பட்டதாம். இந்த யோசனைக்கு முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்தவர் நடிகர் விஜய் சேதுபதி தானாம்.

 

காரணம், இதுவரை அவர் நடித்த படங்களில் எதிலும் முழு சம்பள தொகையை அவர் பெற்றதில்லையாம். படம் தொடங்கும்போது பேசப்படும் சம்பள தொகையில் குறைந்தது 1 கோடி ரூபாயாவது பாக்கி வைத்து விடுவார்களாம். அவரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விடுகிறாராம். இப்படியே அவர் விட்டு விட்டு, இதுவரை ரூ.21 கோடி ரூபாய் அவருக்கு வர வேண்டி உள்ளதாம். எந்தவித அக்ரிமெண்டும் போடாத போதே, தனக்கு இவ்வளவு தொகை சம்பள பாக்கி வைக்கிறார்கள், இதையே அக்ரிமெண்ட் போட்டு செய்தால், சிலர் மொத்த சம்பளத்தையும் பாக்கி வைத்தாலும் வைப்பார்கள், என்று அந்த கூட்டத்தில் கூறி வருத்தப்பட்டாராம்.

Related News

2472

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery