சினிமாத் துறையில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதாக பல நடிகைகள் வருத்தப்பட்டு பேட்டி அளித்து வருகிறார்கள். தெலுங்கு சினிமா நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும் மாடலுமான ஆகார்ஷி சர்மாவுக்கு, நடு ரோட்டில் ரசிகர்கள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் தகவல் சினிமாத் துறையினரை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மும்பையில் வசிக்கும் ஆகாஷி சர்மா, இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது இளைஞர்கள் இரண்டு பேர் நடிகையின் பின்னாடியே துரத்தி வந்திருக்கிறார்கள். திடீரென்று ஆகார்ஷி சர்மாவின் பாவாடையை பிடித்து இழுத்த அவர்கள் ஆபாசமாகவும் பேசியிருக்கிறார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆகார்ஷி, நிலை தடுமாறி வண்டியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கூறிய ஆகார்ஷி சர்மா, ”நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை யாரும் தட்டி கேட்கவில்லை. யாரும் உதவிக்கும் வரவில்லை. இது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
அந்த மர்ம நபர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கும் ஆகார்ஷி சர்மா, அவர்கள் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை, என்றும் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...