Latest News :

கார்ப்பரேட் ஆக்கிரமிப்பில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது! - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
Wednesday April-25 2018

சினிமா வேலை நிறுத்தப் போராட்டம் முடிவடைந்து திரைப்படங்கள் வெளியாக தொடங்கியிருக்கிறது. வாரத்திற்கு மூன்று படங்கள் என்ற கட்டுப்பாட்டோடு புதிய படங்கள் வெளியாகி வரும் நிலையில், போராட்டத்திற்குப் பிறகு முதல் படமாக வெளியானது ‘மெர்க்குரி’.

 

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் வசனம் இல்லை என்றாலும், கார்ப்பரேட் நிறுவனங்களால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள், என்பதை ரொம்ப சத்தமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

 

இப்படம் மக்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இந்த வெற்றியை மாவட்டம் வாரியாக சென்று படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

 

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட ‘மெர்க்குரி’ படக்குழுவினர் விசிட் அடித்தனர். அங்கே அவர்களை சந்தித்த பத்திரிகையாளர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது, என்று கூறியிருக்கிறார்.

 

மேலும் பேசிய அவர், ”உலகத்தையே கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. அதில் இருந்து தப்பிப்பதற்கு வழி தெரியவில்லை. தப்பிக்கவும் முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும். ‘மெர்க்குரி’ படமும் ஒரு போராட்ட வடிவம் தான். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தான் இறுதியான முடிவை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

Related News

2479

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery