Latest News :

கார்ப்பரேட் ஆக்கிரமிப்பில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது! - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
Wednesday April-25 2018

சினிமா வேலை நிறுத்தப் போராட்டம் முடிவடைந்து திரைப்படங்கள் வெளியாக தொடங்கியிருக்கிறது. வாரத்திற்கு மூன்று படங்கள் என்ற கட்டுப்பாட்டோடு புதிய படங்கள் வெளியாகி வரும் நிலையில், போராட்டத்திற்குப் பிறகு முதல் படமாக வெளியானது ‘மெர்க்குரி’.

 

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் வசனம் இல்லை என்றாலும், கார்ப்பரேட் நிறுவனங்களால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள், என்பதை ரொம்ப சத்தமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

 

இப்படம் மக்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இந்த வெற்றியை மாவட்டம் வாரியாக சென்று படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

 

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட ‘மெர்க்குரி’ படக்குழுவினர் விசிட் அடித்தனர். அங்கே அவர்களை சந்தித்த பத்திரிகையாளர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது, என்று கூறியிருக்கிறார்.

 

மேலும் பேசிய அவர், ”உலகத்தையே கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. அதில் இருந்து தப்பிப்பதற்கு வழி தெரியவில்லை. தப்பிக்கவும் முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும். ‘மெர்க்குரி’ படமும் ஒரு போராட்ட வடிவம் தான். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தான் இறுதியான முடிவை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

Related News

2479

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery