பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் அக்ஷய் குமார். ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இவர், தற்போது ’கேசரி’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புனே அருகில் உள்ள சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் ஹீரோ அக்ஷய் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது, அங்கு படப்பிடிப்புக்காக பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகள் எதிர்பாரதவிதமாக வெடித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த குண்டுவெடிப்பால் படப்பிடிப்பில் தீப்பிடித்து பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட்டியும் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாம்.
பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அனைத்துள்ளனர். இந்த விபத்தில் படக்குழுவினர் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...