Latest News :

பிரபல நடிகரின் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு!
Thursday April-26 2018

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் அக்‌ஷய் குமார். ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இவர், தற்போது ’கேசரி’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புனே அருகில் உள்ள சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.

 

நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் ஹீரோ அக்‌ஷய் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது, அங்கு படப்பிடிப்புக்காக பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகள் எதிர்பாரதவிதமாக வெடித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த குண்டுவெடிப்பால் படப்பிடிப்பில் தீப்பிடித்து பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட்டியும் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாம். 

 

Akshay Kumar

 

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அனைத்துள்ளனர். இந்த விபத்தில் படக்குழுவினர் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Related News

2481

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery