கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் கவுசல்யா. தொடர்ந்து ‘நேருக்கு நேர்’, ‘பிரியமுடன்’, ‘சொல்லமலே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் 90 மற்றும் 2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 38 வயதாகும் கவுசல்யா, சில படங்களில் அண்ணி, அக்கா உள்ளிட்ட சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருவதோடு, டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கவுசல்யா திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டுள்ளாராம். விரைவில் தனது மனதுக்கு பிடித்தவரை தான் மணக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

தற்போது கேரளாவில் முகாமிட்டுள்ள கவுசல்யாவுக்கு, அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளார்களாம்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...