பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதோடு, ஹாலிவுட் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா நடித்த ‘குவாண்டிகோ’ என்ற தொடர் அமெரிக்காவில் பெரும் பிரபலமடைந்தது. அதில் அலெக்ஸ் பாரிஷ் என்ற எப்.பி.ஐ அதிகாரியாக அவர் நடிக்கிறார். இந்த தொடரின் 3 வது சீசனின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பிரியங்கா சோப்ரா படுகாயம் அடைந்துள்ளார். அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரியங்கா சோப்ரா, தொடர்ந்து படப்பிடிப்புல் கலந்துக்கொள்ளாத நிலைக்கு ஆளாகியுள்ளார். மேலும், அவரை மருத்துவர்கள் ஒரு மாதம் ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்களாம். அதனால், பிரியங்கா சோப்ரா, தற்போது அந்த தொடரில் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஓய்வில் இருக்கிறாராம்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...