பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதோடு, ஹாலிவுட் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா நடித்த ‘குவாண்டிகோ’ என்ற தொடர் அமெரிக்காவில் பெரும் பிரபலமடைந்தது. அதில் அலெக்ஸ் பாரிஷ் என்ற எப்.பி.ஐ அதிகாரியாக அவர் நடிக்கிறார். இந்த தொடரின் 3 வது சீசனின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பிரியங்கா சோப்ரா படுகாயம் அடைந்துள்ளார். அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரியங்கா சோப்ரா, தொடர்ந்து படப்பிடிப்புல் கலந்துக்கொள்ளாத நிலைக்கு ஆளாகியுள்ளார். மேலும், அவரை மருத்துவர்கள் ஒரு மாதம் ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்களாம். அதனால், பிரியங்கா சோப்ரா, தற்போது அந்த தொடரில் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஓய்வில் இருக்கிறாராம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...