‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ரெஜினா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர்.சந்திரமெளலி’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரெஜினா தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பேட்டி ஒன்றில் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறிய ரெஜினா, “ஒரு நாள் சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் பாலத்தில் நண்பர்கள் சிலருடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீர் என தன்னுடைய உதட்டை பிடித்துவிட்டார். அந்த சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் இருந்து மீள எனக்கு சில நிமிடம் ஆனது. பின் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தனக்கு தெரிந்த அத்தனை கெட்டவார்த்தைகளாலும் திட்டினேன்.
இந்த ஒரு முறை மட்டும் அல்ல, இதுபோல பல முறை நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறேன். அப்போதெல்லாம் கதறி அதுதது மட்டும் இன்றி, அவர்களை கண்டித்து அடித்தும் இருக்கிறேன்.” என்று கண் கலங்கியபடி கூறினார்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...