தமிழ் சினிமாவில் கவர்ச்சி அணுகுண்டாக வலம் வந்த நமீதா, ஒரு சில படங்களுக்கு பிறகு தனது பட்டப் பெயருக்கு ஏற்றவாறு உடல் எடை அதிகரித்து ரொம்பவே குண்டாகிவிட்டார். இதனால், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், கடை திறப்பு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
பிறகு தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் அதில் வெற்றி பெற்ற நிலையில்,
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததும், அப்போட்டியில் ஒரு சில எப்பிசோட்கள் மட்டுமே பங்கேற்றவர் அதன் பிறகு, சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தார்.
இதற்கிடையே, திடீரென்று வீரா என்ற தெலுங்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தவர், ஆந்திர மாநிலத்தில் அவரை திருமணம் செய்துக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். சென்னை மச்சான்ஸ்களை மறந்துப் போன நமீதா, திருமணத்திற்குப் பிறகு சென்னை மச்சான்ஸ்கள் அதிர்ச்சியாகும் அளவுக்கு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதவாது, திருமணத்திற்குப் பிறகு நமீதா மீண்டும் உடல் எடை அதிகரித்து ரொம்ப குண்டாக மாறிவிட்டார். உடல் எடையை குறைப்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டவர், தற்போது மீண்டும் உடல் அடை அதிகரித்திருப்பதால் ரொம்ப அப்செட்டாகிவிட்டாராம்.
சமீபத்தில் வெளியான நமீதாவின் குண்டு வடிவ புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களை ரொம்பவே அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்த புகைப்படத்தைப் பார்க்கும் அவரது ரசிகர்கள், “திருமணத்திற்குப் பிறகு உண்டாவங்க என்று பார்த்தா...இப்படி, குண்டாய்ட்டங்களே...” என்று தங்களது வருத்ததையும் தெரிவித்துள்ளனர்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்...
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 'யங்ஸ்டார் ' பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'டிராகன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது...
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது...