Latest News :

அடுத்த சீரியலுக்கு தயாரான ரச்சிதா!
Monday April-30 2018

‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா, தனது உண்மையான பெயரை மறந்து மீனாட்சியாகவே வாழ்ந்து வருகிறார். இவரது ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் தற்போது ரசிகர்களின் பேவரைட் சீரியலாக சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.

 

இதற்கிடையே, நடிகை ரச்சிதா அடுத்த சீரியலுக்கு தயாராகிவிட்டார். அதனால், அவரது ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் விரைவில் முடியப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய ரச்சிதா, நானும் என் கணவரும் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறோம். தற்போதைக்கு இதை மட்டும் தான் கூற முடியும். அது என்ன சீரியல், எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது, என்பதை பொருமையாக அறிவிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

 

ரச்சிதா மற்றும் அவரது கணவர் தினேஷ் கூட்டணியில் ஏற்கனவே உருவான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, அவர்கள் இணையும் புது சீரியல் மீது ரசிகர்களுக்கு தற்போதே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

2513

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

திரைப்பட தயாரிப்பில் இறங்கிய 'நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்'!
Saturday July-12 2025

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!
Saturday July-12 2025

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery