‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா, தனது உண்மையான பெயரை மறந்து மீனாட்சியாகவே வாழ்ந்து வருகிறார். இவரது ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் தற்போது ரசிகர்களின் பேவரைட் சீரியலாக சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, நடிகை ரச்சிதா அடுத்த சீரியலுக்கு தயாராகிவிட்டார். அதனால், அவரது ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் விரைவில் முடியப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய ரச்சிதா, நானும் என் கணவரும் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறோம். தற்போதைக்கு இதை மட்டும் தான் கூற முடியும். அது என்ன சீரியல், எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது, என்பதை பொருமையாக அறிவிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
ரச்சிதா மற்றும் அவரது கணவர் தினேஷ் கூட்டணியில் ஏற்கனவே உருவான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, அவர்கள் இணையும் புது சீரியல் மீது ரசிகர்களுக்கு தற்போதே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அந்தோனி'...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...
நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’...