‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா, தனது உண்மையான பெயரை மறந்து மீனாட்சியாகவே வாழ்ந்து வருகிறார். இவரது ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் தற்போது ரசிகர்களின் பேவரைட் சீரியலாக சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, நடிகை ரச்சிதா அடுத்த சீரியலுக்கு தயாராகிவிட்டார். அதனால், அவரது ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் விரைவில் முடியப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய ரச்சிதா, நானும் என் கணவரும் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறோம். தற்போதைக்கு இதை மட்டும் தான் கூற முடியும். அது என்ன சீரியல், எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது, என்பதை பொருமையாக அறிவிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
ரச்சிதா மற்றும் அவரது கணவர் தினேஷ் கூட்டணியில் ஏற்கனவே உருவான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, அவர்கள் இணையும் புது சீரியல் மீது ரசிகர்களுக்கு தற்போதே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...