மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தியதால் படப்பிடிப்பு தொடங்க வில்லை. மேலும், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதில் தீவிரமாக இருந்தனர்.
இதற்கிடையே, பல நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும், என்பதைக் காட்டிலும் இதில் நடிகர்களின் லுக் எப்படி இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. தற்போது வேலை நிறுத்த போராட்டம் முடிவடைந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோர் உள்ளார்கள்.

நடிகர்கள் அனைவரும் ஸ்டைலிஷாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...