மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தியதால் படப்பிடிப்பு தொடங்க வில்லை. மேலும், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதில் தீவிரமாக இருந்தனர்.
இதற்கிடையே, பல நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும், என்பதைக் காட்டிலும் இதில் நடிகர்களின் லுக் எப்படி இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. தற்போது வேலை நிறுத்த போராட்டம் முடிவடைந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோர் உள்ளார்கள்.

நடிகர்கள் அனைவரும் ஸ்டைலிஷாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...