தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரேயா, ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால், அங்கும் அவரது படங்கள் தோல்வியடைந்ததால், பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவில் கடைசியாக சிம்புடன் ஸ்ரேயா நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து அவருக்கு தொடர் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஸ்ரேயா, அப்படத்திற்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தார். ஆனால், பைனான்ஸ் பிரச்சினையால் அப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, பட வாய்ப்புகள் இல்லாததால் தனது ரஷ்ய நாட்டு காதலரை திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரேயா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், அவருக்கு வாய்ப்புகள் தான் சரியாக அமையவில்லை.
இந்த நிலையில், ஸ்ரேயா நடித்திருக்கும் இந்திப் படம் ’பாமவுஷ்’ வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து நடிக்கலாம். அப்படி படம் சரியாக போகவில்லை என்றால், சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, குடும்பத்தை கவனிக்கும் தலைவியாக வாழ்க்கையை தொடரலாம், என்ற முடிவு எடுத்திருக்கிறாராம்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன், என்று ஸ்ரேயா கூறியதும் குஷியடைந்த அவரது ரசிகர்கள், தற்போதைய அவரது புதிய முடிவால் ரொம்பவே ஷாக்காகியுள்ளார்கள்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்...
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 'யங்ஸ்டார் ' பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'டிராகன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது...
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது...