தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரேயா, ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால், அங்கும் அவரது படங்கள் தோல்வியடைந்ததால், பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவில் கடைசியாக சிம்புடன் ஸ்ரேயா நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து அவருக்கு தொடர் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஸ்ரேயா, அப்படத்திற்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தார். ஆனால், பைனான்ஸ் பிரச்சினையால் அப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, பட வாய்ப்புகள் இல்லாததால் தனது ரஷ்ய நாட்டு காதலரை திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரேயா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், அவருக்கு வாய்ப்புகள் தான் சரியாக அமையவில்லை.
இந்த நிலையில், ஸ்ரேயா நடித்திருக்கும் இந்திப் படம் ’பாமவுஷ்’ வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து நடிக்கலாம். அப்படி படம் சரியாக போகவில்லை என்றால், சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, குடும்பத்தை கவனிக்கும் தலைவியாக வாழ்க்கையை தொடரலாம், என்ற முடிவு எடுத்திருக்கிறாராம்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன், என்று ஸ்ரேயா கூறியதும் குஷியடைந்த அவரது ரசிகர்கள், தற்போதைய அவரது புதிய முடிவால் ரொம்பவே ஷாக்காகியுள்ளார்கள்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...