தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரேயா, ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால், அங்கும் அவரது படங்கள் தோல்வியடைந்ததால், பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவில் கடைசியாக சிம்புடன் ஸ்ரேயா நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து அவருக்கு தொடர் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஸ்ரேயா, அப்படத்திற்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தார். ஆனால், பைனான்ஸ் பிரச்சினையால் அப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, பட வாய்ப்புகள் இல்லாததால் தனது ரஷ்ய நாட்டு காதலரை திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரேயா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், அவருக்கு வாய்ப்புகள் தான் சரியாக அமையவில்லை.
இந்த நிலையில், ஸ்ரேயா நடித்திருக்கும் இந்திப் படம் ’பாமவுஷ்’ வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து நடிக்கலாம். அப்படி படம் சரியாக போகவில்லை என்றால், சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, குடும்பத்தை கவனிக்கும் தலைவியாக வாழ்க்கையை தொடரலாம், என்ற முடிவு எடுத்திருக்கிறாராம்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன், என்று ஸ்ரேயா கூறியதும் குஷியடைந்த அவரது ரசிகர்கள், தற்போதைய அவரது புதிய முடிவால் ரொம்பவே ஷாக்காகியுள்ளார்கள்.
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது...