Latest News :

புதுமுக ஹீரோவுக்கு வந்த சினிமா வெறி! - விளைவு என்ன ஆனது தெரியுமா?
Tuesday May-01 2018

விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடங்களுக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் ‘செயல்’. இதில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள ராஜன் தேஜேஸ்வர், சினிமா மீது பேரார்வம் மிக்கவராக உள்ளார் என்று சொல்வதற்கு பதிலாக வெறித்தனமாக உள்ளார் என்றே சொல்லலாம்.

 

சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டவராக இருந்தவர், ஒரு கட்டத்தில் சினிமா மீது வெறிக்கொண்டவராக மாற, அந்த நேரத்தில் தான் இயக்குநர் ரவி அப்புலுவை சந்தித்துள்ளார். தான் எந்த மாதிரியான கதையில் நடிக்க வேண்டும், தான் காத்திருந்தேனோ அந்த மாதிரியான ஒரு கதையை இயக்குநர் ரவி அப்புலு சொன்னதால் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

 

சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் அவரது தந்தையே அப்படத்தை தயாரிக்க, அப்படி தொடங்கப்பட்ட படம் தற்போது அனைத்து பணிகளுடம் முடிவடைந்து மே 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

 

யானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண சராசரியான ஒருவன் மோதி சாய்ப்பது தான் ‘செயல்’ படத்தின் ஒன்லைன் கதை. 

 

ஆக்‌ஷன், காமெடி, காதல் என்று முதல் படத்திலேயே பக்கா கமர்ஷியல் கதையில் நடிச்ச திருப்தியோடு இருக்கும் ராஜன் தேஸ்வரின் நடிப்பில் இப்படம் தரமாக வந்திருப்பதால், தயாரிப்பாளர் சி.ஆர்.ராஜன் உடனே அடுத்த படத்தையும் தொடங்கிவிட்டார்.

 

சமுத்திரக்கனியின் உதவியாளர் சாய் சங்க இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘குமாரு வேலைக்கு போறான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இப்படமும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்று கூறிய ஹீரோ ராஜன் தேஜேஸ்வர், சினிமா மீது தனக்கு ஏற்பட்ட வெறியின் விளைவாக தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது இரண்டாவது படம் தொடங்கிவிட்டது, என்று சந்தோஷமாக கூறினார்.

Related News

2521

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery