மாலை போட வந்த ரசிகர் ஒருவரை பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள பாலகிருஷ்ணா, கர்னூல் மாவட்டத்தில் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேற்று இரவு கர்னூல் மாவட்டத்துக்கு வந்த அவரை கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பிறகு ஓட்டல் அறைக்கு வந்த அவரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அப்போது பலர் அவருக்கு மலர் மாலை அணிவிக்க முண்டியடித்தனர். இதில் ரசிகர் ஒருவர் எதிர்ப்பாரத விதமாக பாலகிருஷ்ணா மீது விழ, அவரை தூக்கி நிறுத்திய பாலகிருஷ்ணா, அவர் கண்ணத்தில் பளார் என்று அறை விட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி தற்போது டிவி சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...