தொடர் வெற்றிகளைக் கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், பொன்ராம் இயக்கத்தில் ’சீமராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ள நிலையில், அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சிவகார்த்திகேயனின் 13 வது படமான இப்படத்தின் தொடக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது.
இந்த படம் குறித்து கூறிய ஞானவேல்ராஜா, “ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இணையும் போது, அந்த படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை. மேலும் ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும். எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்த படத்தில் கொடுப்பார் என நம்புகிறேன்.
மேலும் சிவகார்த்திகேயன் பொழுதுபோக்கு படங்களை கொடுக்கும் ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் பயனடைய வேண்டும் என்று நினைப்பவர். எனவே இந்த மாதிரி நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதர்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ரசிகர்கள் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம். மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
பாக்ஸ் மூவிஸ் சார்பில் மது தயாரிப்பில் வின்சி பிரான்சிஸ் திரைக்கதையில், மலையாள சினிமா நடன இயக்குநர் ராபின் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வருத்துப் போக்கு’...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தாய் கிழவி’...
இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது...