’களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஓவியா, அப்படத்திற்கு பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சிக்கு மாறினார். அப்படி இருந்தும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. இதனால், “ஓவியா அது யாருயா?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு அவர் பின் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸில் கலந்துக் கொண்ட ஓவியா, தற்போது தமிழகத்தின் முக்கிய நபர்களில் ஒருவராகியுள்ளார். ‘ஓவியா ராணுவம்’, ‘ஓவியா பாய்ஸ்’, ‘ஓவியா பட்டாளம்’ உள்ளிட்ட பல பெயர்களில் ஓவியாவுக்கு ரசிகர்கள் வட்டம் உருவாகியிருப்பதோடு, அவர் குறித்து தினமும் சமூக வலைதளங்களிலும் பேசப்படுகிறது.
அதே சமயம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு எதிராக கருத்து கூறி வந்த நடிகை காயத்ரி, நடிகர் சக்தி, ஜூலி ஆகியோரை ஓவியா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருவதோடு, அவர்கள் பற்றி மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
ரசிகர்களின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓவியா, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரொம்ப கஷ்டமான விஷயம் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. ஜூலி மற்றும் சக்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர். அந்த நிகழ்ச்சியில் என்னை மற்றவர்கள் ஒதுக்கிய போது நான் எப்படி மனதளவில் பாதிக்கப்பட்டேனோ, அதேபோல ஒரு நிலை தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தயவுசெய்து அவர்கள் மீது மோசமான கருத்துக்களை முன்வைக்காதீர்கள். அது என்னுடைய மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
தவறு எல்லோரும் தான் செய்கிறோம். யாரும் இங்கு சரியாக இல்லை, நான் உள்பட. தவறு செய்தால் தான் மனிதர்கள், இல்லையெனில் அவர்கள் விலங்குகளுக்கு சமம். கொலை, கற்பழிப்பு குற்றவாளிகளை கூட அரசாங்கமே மன்னித்து விடுகிறது. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவை எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. அவர்களை தொல்லை செய்யாதீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பு எனக்கு புரிகிறது. ஆனால், மற்றவர்களை கஷ்டப்படுத்தி என்னிடம் அன்பு காட்ட வேண்டாம். அப்படிபட்ட ரசிகர்கள் எனக்கு தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...