’மெர்சல்’ படத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகராகியுள்ள விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ரஜினி, கமல் வரிசையில் விஜயும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வந்தவர், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியையும் முடக்கிவிட்டுள்ளார்.
விஜயின் ரசிகர்களும் தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதோடு, சில போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவை அனைத்தும் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிதான் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென்று சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது விட்டில் ரசிக மன்ற நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
விஜயின் இந்த சந்திப்புக்கு பின்னால் அரசியல் இருக்கிறது என்றும், அவரது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ரசிகர் மன்ற வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது...
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன்...
வீர அன்பரசு எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’...