’மெர்சல்’ படத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகராகியுள்ள விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ரஜினி, கமல் வரிசையில் விஜயும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வந்தவர், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியையும் முடக்கிவிட்டுள்ளார்.
விஜயின் ரசிகர்களும் தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதோடு, சில போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவை அனைத்தும் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிதான் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென்று சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது விட்டில் ரசிக மன்ற நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
விஜயின் இந்த சந்திப்புக்கு பின்னால் அரசியல் இருக்கிறது என்றும், அவரது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ரசிகர் மன்ற வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும்...
சூர்யா நடிக்கும் அடுத்த படம் அவரது 46 வது படமாக உருவாகிறது...
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers), டி ஸ்டுடியோஸ் ( D Studios), டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்’ காதல் ரீசெட் ரீப்பிட்’...