’மெர்சல்’ படத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகராகியுள்ள விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ரஜினி, கமல் வரிசையில் விஜயும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வந்தவர், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியையும் முடக்கிவிட்டுள்ளார்.
விஜயின் ரசிகர்களும் தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதோடு, சில போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவை அனைத்தும் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிதான் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென்று சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது விட்டில் ரசிக மன்ற நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
விஜயின் இந்த சந்திப்புக்கு பின்னால் அரசியல் இருக்கிறது என்றும், அவரது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ரசிகர் மன்ற வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்...
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் ( White Carpet Films) திகழ்கிறது...
முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் ’ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது...