தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ள சிவகார்த்திகேயனின் படங்களில் பாடல்களும் செம ஹிட்டாகியுள்ளது. அதிலும், அனிருத் - சிவகார்த்திகேயன் கூட்டணி என்றால் அந்த பாடல்களுக்காகவே படங்கள் ஓடியது உண்டு. ஏன், சிவகார்த்திகேயனே தனது வளர்ச்சியில் அனிருத்துக்கும் முக்கிய பங்கு உண்டு என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளது.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் தற்போது நடிக்க இருக்கும் புதிய படங்களில் அனிருத் இல்லாமல் வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கும் விவேக் - மெர்வின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இதனால், அனிருத்தை சிவகார்த்திகேயன் கழட்டிவிட தொடங்கிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. தனுஷுக்கும் அனிருத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட போதும், அனிருத்துடன் நெருக்கமாக இருந்த சிவகார்த்திகேயன், தற்போது அனிருத்தை நிராகரிப்பதால், இவரகளுக்கு இடையேயும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...