தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ள சிவகார்த்திகேயனின் படங்களில் பாடல்களும் செம ஹிட்டாகியுள்ளது. அதிலும், அனிருத் - சிவகார்த்திகேயன் கூட்டணி என்றால் அந்த பாடல்களுக்காகவே படங்கள் ஓடியது உண்டு. ஏன், சிவகார்த்திகேயனே தனது வளர்ச்சியில் அனிருத்துக்கும் முக்கிய பங்கு உண்டு என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளது.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் தற்போது நடிக்க இருக்கும் புதிய படங்களில் அனிருத் இல்லாமல் வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கும் விவேக் - மெர்வின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இதனால், அனிருத்தை சிவகார்த்திகேயன் கழட்டிவிட தொடங்கிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. தனுஷுக்கும் அனிருத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட போதும், அனிருத்துடன் நெருக்கமாக இருந்த சிவகார்த்திகேயன், தற்போது அனிருத்தை நிராகரிப்பதால், இவரகளுக்கு இடையேயும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...