தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ள சிவகார்த்திகேயனின் படங்களில் பாடல்களும் செம ஹிட்டாகியுள்ளது. அதிலும், அனிருத் - சிவகார்த்திகேயன் கூட்டணி என்றால் அந்த பாடல்களுக்காகவே படங்கள் ஓடியது உண்டு. ஏன், சிவகார்த்திகேயனே தனது வளர்ச்சியில் அனிருத்துக்கும் முக்கிய பங்கு உண்டு என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளது.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் தற்போது நடிக்க இருக்கும் புதிய படங்களில் அனிருத் இல்லாமல் வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கும் விவேக் - மெர்வின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இதனால், அனிருத்தை சிவகார்த்திகேயன் கழட்டிவிட தொடங்கிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. தனுஷுக்கும் அனிருத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட போதும், அனிருத்துடன் நெருக்கமாக இருந்த சிவகார்த்திகேயன், தற்போது அனிருத்தை நிராகரிப்பதால், இவரகளுக்கு இடையேயும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...