நடிகை பாவனா காரில் கடத்தி கற்பழிக்கப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சிறையில் தள்ளவும், சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தரவும், போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அதன்படி, பாவனாவுக்கு நெருக்கமாக உள்ள நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் ரம்யா நம்பீசனிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சம்பவம் நடந்த அன்றைய தினம், பாவனா தப்பித்து ரம்யா நம்பீசன் வீட்டிற்கு தான் சென்றுள்ளார். அப்போது அவர் எந்த கோலத்தில் இருந்தார். அவரது மனநிலை எப்படி இருந்தது, அவருக்கு அளிக்கப்பட்ட முதலுதவி உள்ளிட்டவைகள் குறித்து ரம்யா நம்பீசன் போலீசாரிடம் வெளிப்படையாக கூறியியுள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸ் கிளப்பில் நடைபெற்ற இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...