Latest News :

’மிஸ்டர் சந்திரமெளலி’ படத்திற்காக சொந்த குரலில் டப்பிங் பேசிய ரெஜினா!
Saturday May-05 2018

திரு இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாக பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக பாடல் காட்சிகளில் ரெஜினாவின் கவர்ச்சியான அழகு பெரிதும் பேசப்படும் விதத்தில் அமைந்துள்ளது.

 

இந்த நிலையில், இதே படத்திற்காக ரெஜினா தனது சினிமா பயணத்தில் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளார். ஆம், இப்படத்திற்காக ரெஜினா தனது சொந்த குரலில் முதல் முறையாக டப்பிங் பேசியிருக்கிறார். ரெஜினாவின் இந்த முயற்சியை படக்குழுவினர் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

 

தயாரிப்பாளர் தனஞ்செழியன் இது குறித்து கூறுகையில், “ரெஜினா இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவர் தமிழ் ஸ்க்ரிப்டை படித்ததும், தமிழில் அவரின் மொழி ஆளுமையையும் கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டோம். அவர் நம்ம ஊரு சென்னை பொண்ணு, சென்னையில் தான் கல்லூரி படிப்பையும் முடித்தார். அவரிடம் ஏன் இதற்கு முன்பு சொந்த குரலில் டப்பிங் பேசவில்லை என்று கேட்டபோது, யாரும் டப்பிங் பேச என்னை இதுவரை அணுகவில்லை என்றார். ரெஜினா சொந்த குரலில் டப்பிங் பேச இயக்குநர் திரு வாய்ப்பு அளிக்க, ரெஜினா எந்த குறையும் இல்லாமல் பேசி, அவரின் மொழி ஆளுமையால் எங்களை பிரமிக்க வைத்தார். அவரின் கேரக்டருக்கு அவரே டப்பிங் பேசியதன் மூலம், கதாபாத்திரம் முழுமை அடைந்தது.” என்று தெரிவித்தார்.

Related News

2560

’அகண்டா 2’ இந்து தர்மத்தை, கலாச்சாரத்தை போற்றும் ஒரு படைப்பு! - நடிகர் பாலகிருஷ்ணா நெகிழ்ச்சி
Thursday December-04 2025

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில், போயபாடி ஶ்ரீனு எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் ‘அகண்டா 2’...

ஏவிஎம் சரவணன் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
Thursday December-04 2025

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற மற்றும் பழமையான தயாரிப்பு நிறுவனமான ஏ...

வைரலான ‘வா வாத்தியார்’ படத்தின் ரீமிக்ஸ் பாடல்!
Tuesday December-02 2025

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

Recent Gallery