கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ பெரும் வெற்றி பெற்றாலும், வெளியாவதற்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கியது. தமிழகத்தில் வெளியாகமல் பிற மாநிலங்களில் வெளியான அப்படம், பல தடைகளை கடந்து தமிழகத்தில் வெளியானது.
தற்போது ‘விஸ்வரூபம்-2’ படத்தை முடித்திருக்கும் கமல்ஹாசன், அப்படத்தை இம்மாத இறுதிய்ல் அல்லது அடுத்த மாதம் வெளியிட தயாராகி வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தமிழில் பல சர்ச்சையான காட்சிகள் நீக்கப்பட்டு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தி பதிப்பை பார்த்த சென்சார் குழுவினர் பல காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களாம். மொத்தம் 17 காட்சிகளை நீக்கினால் தான் சான்றிதழ் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், காட்சிகளை நீக்க வேண்டும் என்பதில் தணிக்கை குழுவினர் பிடிவாதமாக இருந்ததால், அவர்கள் நீக்க சொன்ன காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. பிறகு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...