கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ பெரும் வெற்றி பெற்றாலும், வெளியாவதற்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கியது. தமிழகத்தில் வெளியாகமல் பிற மாநிலங்களில் வெளியான அப்படம், பல தடைகளை கடந்து தமிழகத்தில் வெளியானது.
தற்போது ‘விஸ்வரூபம்-2’ படத்தை முடித்திருக்கும் கமல்ஹாசன், அப்படத்தை இம்மாத இறுதிய்ல் அல்லது அடுத்த மாதம் வெளியிட தயாராகி வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தமிழில் பல சர்ச்சையான காட்சிகள் நீக்கப்பட்டு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தி பதிப்பை பார்த்த சென்சார் குழுவினர் பல காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களாம். மொத்தம் 17 காட்சிகளை நீக்கினால் தான் சான்றிதழ் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், காட்சிகளை நீக்க வேண்டும் என்பதில் தணிக்கை குழுவினர் பிடிவாதமாக இருந்ததால், அவர்கள் நீக்க சொன்ன காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. பிறகு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படைப்பில் இணைந்துள்ளார்...
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி’...
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ...