திரையுலக தம்பதியான நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர்.சி, தமிழ் ரசிகர்களுக்கு பித்த ஜோடி ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது குஷ்பு நடிப்பு, அரசியல், திரைப்படங்கள் தயாரிப்பு என்று பிஸியாக இருந்தாலும், குடும்பத்தை கவனித்துக் கொள்வதிலும் வல்லவராக திகழ்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட இயக்குநர் சுந்தர்.சி, குஷ்புவை விட தனக்கு மிகவும் பிடித்த நடிகை குறித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சுந்தர்.சி-யிடம் சில நாயகிகளின் புகைப்படங்களை காட்டினர். அப்போது மறைந்த நடிகை சௌந்தர்யா புகைப்படத்தை காட்ட, அந்த நேரத்தில் சுந்தர்.சி கொஞ்சம் எமோஷ்னல் ஆனார்.

பிறகு பேசியவர், "குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் கண்டிப்பாக இந்த பெண்ணிடம் என் காதலை கூறியிருப்பேன். அந்த அளவிற்கு எனக்கு பிடித்த நாயகி அவர், எப்போதும் சௌந்தர்யாவுடன் அவருடைய அண்ணன் இருப்பார், இறக்கும் போது கூட இருவரும் சேர்ந்து இறந்துவிட்டனர்.” கவலையுடன் தெரிவித்தார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...