‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கும் இயக்குநர் அட்லீ, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘மெர்சல்’ வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்திருந்தாலும், அட்லீயின் அடுத்தப் படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, அட்லீ விஜயை மீண்டும் இயக்கப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. பிறகு அவர் ஒரு தெலுங்குப் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற அட்லீயை, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சூழ்ந்துக் கொண்டனர். அப்போது அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்த அட்லீ, “நான் தெலுங்குப் படம் நிச்சயம் இயக்குவேன். ஆனால் எனது அடுத்தப் படம் தமிழ்ப் படம் தான். அதற்குப் பிறகு தான் தெலுங்கில் படம் இயக்கப் போகிறேன்.” என்று தெரிவித்தார்.
இதன் மூலம், அட்லீ அடுத்ததாக தெலுங்குப் படம் இயக்கப் போகிறார், என்று பரவி வந்த சர்ச்சையான வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...