‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கும் இயக்குநர் அட்லீ, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘மெர்சல்’ வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்திருந்தாலும், அட்லீயின் அடுத்தப் படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, அட்லீ விஜயை மீண்டும் இயக்கப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. பிறகு அவர் ஒரு தெலுங்குப் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற அட்லீயை, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சூழ்ந்துக் கொண்டனர். அப்போது அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்த அட்லீ, “நான் தெலுங்குப் படம் நிச்சயம் இயக்குவேன். ஆனால் எனது அடுத்தப் படம் தமிழ்ப் படம் தான். அதற்குப் பிறகு தான் தெலுங்கில் படம் இயக்கப் போகிறேன்.” என்று தெரிவித்தார்.
இதன் மூலம், அட்லீ அடுத்ததாக தெலுங்குப் படம் இயக்கப் போகிறார், என்று பரவி வந்த சர்ச்சையான வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...