அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, சமூக வலைதளங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படமாகும்.
விஜய் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதை சன் டிவி மற்றும் சன் மியூசிக் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதோடு, யூடியுபிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப் போகிறார்களாம்.
இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்குவதற்கு இரண்டு முன்னணி சேனல்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். சன் டிவி பெரிய தொகை கொடுக்க தயாராக இருக்க, அவர்களை விடவும் பெரிய தொகை கொடுத்து ‘மெர்சல்’ படத்தை வாங்க ஜீ தமிழ் முன் வந்துள்ளதாம். இதன் காரணமாக இதுவரை சாட்டிலைட் உரிமை விற்கப்படாமல் இருக்கிறது.
இந்த இரண்டு சேனல்களில் யார் பெரிய தொகை கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே ‘மெர்சல்’ சாட்டிலைட் உரிமை கொடுக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் கூறுகின்றன.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...