டான்சராக சினிமா பயணத்தை தொடங்கிய பிரபுதேவா, பிறகு முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தவர், இயக்குநர் அவதாரம் எடுத்து பாலிவுட்டில் நம்பர் ஒன் இயக்குநர்களில் ஒருவரானவர், தமிழிலும் பல ஹிட் படங்களை கொடுத்தார்.
தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் பிரபுதேவா, இயக்குநருக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள ’யங் மங் சங்’, ‘லட்சுமி’ ஆகியப் படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
தற்போது ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்து வரும் பிரபுதேவா தனது அடுத்தப் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஜெபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் இப்படத்தை ஏ.சி.முகில் இயக்குகிறார்.
பிரபுதேவா போலீஸ் வேடத்தில் நடிப்பது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...