’இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு சுமார் 3 ஆண்டுகள் கழித்து செல்வராகவன் இழக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா கெசன்ரா, நந்திதா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் இணைந்திருப்பதாலும், இப்படம் திகில் படம் என்பதாலும் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இப்படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, ரிலீஸாகமல் போனது படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸ் குறித்து ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “படம் தயாரிப்பாளரின் கையில் இருக்கிறது. வெகு விரைவில் வெளியாகும்.” என்று தெரிவித்தார்.
இப்படத்தை இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ் மதன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...