Latest News :

‘இருட்டு அறை’ பட இயக்குநரின் அடுத்தப் படமும் பலானப் படம் தானாம்!
Sunday May-20 2018

’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாச படத்திற்கு திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அப்படம் பெரும் லாபத்தை ஈட்டியது தான் உண்மை. அப்படத்தை தயாரித்த நடிகர் சிவகுமாரின் உறவினரான ஞானவேல்ராஜா, செம குஷியில் இருக்கிறார்.

 

இந்த நிலையில், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவுக்கு அப்பட இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் வந்திருக்கிறாராம்.

 

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இரட்டை அர்த்த வசனங்களை தூக்கலாக வைக்க முடிவு செய்துள்ள இயக்குநர், யார் எப்படி எதிர்த்தாலும், தொடர்ந்து இதுபோன்ற ஆபாச படங்களை எடுத்தே தீருவேன் என்ற முடிவில் இருக்கிறாராம்.

 

ஆனால், இந்த படத்தில் கெளதம் கார்த்திக் நடிக்க மாட்டார் என்பது உறுதியானதால், அவருக்கு பதிலாக வேறு யாரையாவது ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறாராம்.

Related News

2650

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery