‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ‘தளபதி 62’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் நிலவி வரும் ஒரு முக்கிய பிரச்சினையை பற்றி பேசும் கதையாக இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் இரவு நேரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷைவ் ஐத்து ஸ்டைலிஷான பாடல் ஒன்றை படமாக்கினார்.
இந்த நிலையில், படத்தில் இடம்பெறும் அரசியல் மாநாடு காட்சியை படமாக்கி வருகிறார்களாம். ஏற்கனவே, அரசு பள்ளிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்ததால் கல்வியை மையமாக வைத்து கதை நகரும் என்ற எதிர்ப்பார்ப்பில் தற்போது அரசியல் மாநாடு காட்சி படமாக்கப்படுவதால், அரசியல் பின்னணி படத்தில் பலமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதோடு, எழுத்தாளர் பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோரும் அரசியல்வாதி வில்லன்களாக நடிக்கிறார்கள். இவர்களோடு பிரபல நடன இயக்குநர் சிவசங்கரும் முக்கிய வேடம் ஒன்றில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...