தனது திரைப்படங்கள் மூலம் சமூக பிரச்சினைகளை பேசும் இயக்குநர் ஷங்கர், நிஜ வாழ்க்கையில் எதிர்மறையாக இருப்பவர், என்பது அவரது ட்வீட்டர் பதிவால் தெரிந்துவிட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது நேற்று போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில், இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் ஷங்கர், நேற்று ஐபிஎல் கிரிக்கெட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டார். அவரது இத்தகைய செயல் தமிழக மக்களுக்கு பெரும் கோபத்தை உண்டாக்கியது. இதையடுத்து பலர் ஷங்கரின் டிவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி சம்பவம் குறித்து இயக்குநர் ஷங்கர் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ”நேற்று எப்படிபட்ட ஒரு பிரச்சனை நடந்தது அப்போது தெரியவில்லை CSK முக்கியம் இப்போது சம்பவம் குறித்து பதிவிடுகிறீர்கள்” என்று பதிவிட்டிருப்பதோடு, “சமூக அக்கறை எல்லாம் திரையில் மட்டும் தானா” என்று ரசிகர்கள் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகர்களின் கோபத்தை உணர்ந்த இயக்குநர் ஷங்கர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி குறித்து பதிவிட்டது நீக்கிவிட்டார்
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...