சமீபத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாசப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இப்படத்திற்கு திரையுல பிரமுகர்கள், விமர்சகர்கள் என்று பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு குறிப்பிட்ட இளைஞர்களையும், இளம் பெண்களையும் இப்படம் கவர்ந்ததால், இப்படத்தை தயாரித்த ஞானவேல்ராஜ செம லாபம் பார்த்துவிட்டாராம்.
ஞானவேல்ராஜாவுக்கு ஜாக்பாட் அடித்தது போன்ற ஒரு வெற்றியை முரட்டு குத்து படம் கொடுத்ததால், தற்போது தமிழ் சினிமாவில் அதே பாணியில் சில படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
கெளதம் கார்த்திக்கை தொடர்ந்து, ’அட்ட கத்தி’ தினேஷும் அப்படி ஒரு ஆபாசப் படத்தில் நடித்து வருகிறார். ‘பல்லு படாம பாத்துக்க’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் வரதராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
மேலும், ‘குத்துங்க எஜமான் குத்துங்க’ என்ற தலைப்பில் ஒரு படமும் உருவாகிக் கொண்டிருக்க, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...