சமீபத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாசப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இப்படத்திற்கு திரையுல பிரமுகர்கள், விமர்சகர்கள் என்று பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு குறிப்பிட்ட இளைஞர்களையும், இளம் பெண்களையும் இப்படம் கவர்ந்ததால், இப்படத்தை தயாரித்த ஞானவேல்ராஜ செம லாபம் பார்த்துவிட்டாராம்.
ஞானவேல்ராஜாவுக்கு ஜாக்பாட் அடித்தது போன்ற ஒரு வெற்றியை முரட்டு குத்து படம் கொடுத்ததால், தற்போது தமிழ் சினிமாவில் அதே பாணியில் சில படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
கெளதம் கார்த்திக்கை தொடர்ந்து, ’அட்ட கத்தி’ தினேஷும் அப்படி ஒரு ஆபாசப் படத்தில் நடித்து வருகிறார். ‘பல்லு படாம பாத்துக்க’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் வரதராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
மேலும், ‘குத்துங்க எஜமான் குத்துங்க’ என்ற தலைப்பில் ஒரு படமும் உருவாகிக் கொண்டிருக்க, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...