Latest News :

மக்களின் கோபத்திற்கு ஆளான ரஜினிகாந்த்! - வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
Thursday May-31 2018

தூத்துக்குடி போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசிய போது, செய்தியாளர்களை அவமதிக்கும் தோனியிலும், மிரட்டும் தோனியிலும் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

மேலும், போராட்டத்தில் பங்கேற்ற சமூக விரோதிகளால் தான் காவல் துறை துப்பாக்கி சூட்டை நடத்தியது. சீருடையில் இருக்கும் காவலர்களை அடிப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன், என்று கூறியவர், “எதற்கு எடுத்தாலும் போராட்டம்...போராட்டம்...என்று இருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்” என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 

ரஜினிகாந்தின் இத்தகைய கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, பொது மக்களும் ரஜினிகாந்தின் மீது கோபமடைந்துள்ளனர்.

 

ஏற்கனவே, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ரஜினிகாந்த் திணறுகிறார், என்ற கருத்து நிலவி வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்த் பேசியிருப்பது, பலரையும் ஆத்திரமடைய வைத்துள்ளது. ரஜினியின் இந்த பேச்சுக்கு பல பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தமிழக மக்களும் சமூக வலைதளங்கள் மூலம் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related News

2690

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery