Latest News :

மக்களின் கோபத்திற்கு ஆளான ரஜினிகாந்த்! - வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
Thursday May-31 2018

தூத்துக்குடி போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசிய போது, செய்தியாளர்களை அவமதிக்கும் தோனியிலும், மிரட்டும் தோனியிலும் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

மேலும், போராட்டத்தில் பங்கேற்ற சமூக விரோதிகளால் தான் காவல் துறை துப்பாக்கி சூட்டை நடத்தியது. சீருடையில் இருக்கும் காவலர்களை அடிப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன், என்று கூறியவர், “எதற்கு எடுத்தாலும் போராட்டம்...போராட்டம்...என்று இருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்” என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 

ரஜினிகாந்தின் இத்தகைய கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, பொது மக்களும் ரஜினிகாந்தின் மீது கோபமடைந்துள்ளனர்.

 

ஏற்கனவே, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ரஜினிகாந்த் திணறுகிறார், என்ற கருத்து நிலவி வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்த் பேசியிருப்பது, பலரையும் ஆத்திரமடைய வைத்துள்ளது. ரஜினியின் இந்த பேச்சுக்கு பல பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தமிழக மக்களும் சமூக வலைதளங்கள் மூலம் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related News

2690

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery