Latest News :

பாலிவுட் கிரைம் திரில்லரில் நடிக்கும் வேதிகா!
Thursday May-31 2018

டான்ஸால் மட்டும் அல்ல நடிப்பாலும் மிரட்டுவேன், என்பதை ‘பரதேசி’ மூலம் நிரூபித்த வேதிகா, தற்போது பாலிவுட்டில் கால் பதிக்க உள்ளார்.

 

‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் பாலிவுட்டில் களம் இறங்குகிறார். அவர் இயக்க உள்ள இந்தி படத்தில் வேதிகா தான் ஹீரோயின். கிரைம் திரில்லர் படமாக உருவாகும் இப்படம், 2012 ஆம் ஆண்டு வெளியான ‘த பாடி’ என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக் ஆகும்.

 

இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாகவும், முக்கிய வேடத்தில் ரிஷி கபூர் நடிக்கும் இந்த படத்தில் ‘காலகண்டி’ பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

 

பாலிவுட் பட வாய்ப்பு குறித்து கூறிய வேதிகா, “இந்தி பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.” என்றார்.

 

இப்படத்தின் ஹீரோயின் தேர்வுக்காக நாடு முழுவதும் ஆடிஷன் நடத்திய பிறகே, இயக்குநர் ஜித்து ஜோசப், வேதிகாவை தேர்வு செய்திருக்கிறார். மேலும், அப்பாவித்தனம் கலந்த இளம் கல்லூரி மாணவி வேடத்திற்கு வேதிகா கச்சிதமாக பொருந்திப் போவதோடு, இம்ரான் - வேதிகா ஜோடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும், என்றும் இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பு மொரீஷியலில் நடைபெற உள்ளது.

Related News

2696

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery