சென்னை,மார்ச் 29 : ஏழை மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகர் விஷால், நலிவடைந்த துயரத்தில் உள்ள சில திரையுலக கலைஞர்களுக்கும் தனது அறக்கட்டளை மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், ‘ரத்தகண்ணீர்’, ‘தூக்குமேடை’, ‘பேசும் தெய்வம்’ உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியவரும், “நூறாண்டு காலம் வாழ்க...நோய் நொடி இல்லாமல் வளர்க...” என்ற மெகாஹிட் பாடலை பாடியவருமான பாடகி சரளா அம்மா, மற்றும் அவர்களுடைய இரண்டு பெண்கள் ஆதரவின்றி அன்றாட வாழ்வதற்கே திண்டாடி வருவதாக, பத்திரிகை செய்தி மூலம் அறிந்த விஷால், அவர்களை தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலமாக மாதம் ரூ.5 ஆயிரம் தருவதாக தெரிவித்ததோடு, அவர்களுக்கான மருத்துவ உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...