ரஜினிகாந்தின் ‘காலா’ வரும் ஜூன் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்ததால், கர்நாடக வர்த்தக சபை ‘காலா’ படத்திற்கு தடை விதித்துள்ளது.
இந்த தடை குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், தடை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரஜினிகாந்த், அதுபற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன், என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், கர்நாடகாவை தொடர்ந்து நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிலும் ‘காலா’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் வெளியாகும் நேரத்தில் இப்படை தடைகள் அதிகரித்து வருவதால், படத்தின் வசூல் பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தை ரஜினிகாந்தின் மருமகனான நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது...
அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...