ரஜினிகாந்தின் ‘காலா’ வரும் ஜூன் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்ததால், கர்நாடக வர்த்தக சபை ‘காலா’ படத்திற்கு தடை விதித்துள்ளது.
இந்த தடை குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், தடை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரஜினிகாந்த், அதுபற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன், என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், கர்நாடகாவை தொடர்ந்து நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிலும் ‘காலா’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் வெளியாகும் நேரத்தில் இப்படை தடைகள் அதிகரித்து வருவதால், படத்தின் வசூல் பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தை ரஜினிகாந்தின் மருமகனான நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...