’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்குப் பிறகு கார்த்தியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது.
இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விவசாயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கார்த்தி விவசாயியாக நடிக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிகர் சூர்யாவும் நடித்திருக்கிறார். அண்ணன் தம்பிகளான கார்த்தியையும், சூர்யாவையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க சில இயக்குநர்கள் முயற்சித்து வந்த நிலையில், அதனை இயக்குநர் பாண்டிராஜ் செய்து காட்டிவிட்டார். அதேபோல், இப்படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நயந்தாரா நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...