ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அறியப்பட்ட ஜூலி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பெரிய அளவில் பிரபலமானார். இருந்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவருக்கு கிடைத்த மக்களின் ஆதரவு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைக்கவில்லை. மாறாக மக்களின் வெறுப்பு தான் அவருக்கு கிடைத்தது.
வெறுப்போ, ஆதரவோ மக்களிடம் இருந்து எது கிடைத்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாத ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து தற்போது கோடம்பாக்க கதாநாயகி ஆகிவிட்டார். ஆம், ‘பத்தினி’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ஜூலி, தற்போது ‘அம்மன் தாயி’ என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படி சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் ஜூலி, தான் நடிக்கும் படங்கள் ரிலீஸாவதற்கு முன்பாகவே அஜித்தைப் போல மாற முயற்சித்து வருகிறார். ஆம், அஜித் எப்படி தான் நடிக்கும் படங்களின் விழாக்களில் பங்கேற்பதையும், பேட்டி கொடுப்பதையும் தவிர்ப்பாரோ அதுபோல ஜூலியும், பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறாராம்.
கேற்கும் சம்பளத்தை கொடுத்தால், நடிக்க ரெடி. ஆனால் மீடியாக்களுக்கு பேட்டியெல்லாம் கொடுக்க மாட்டேன், என்ற கண்டிஷனோடு தான் நடிக்கவே சம்மதிக்கிறாராம். தற்போது அவர் நடித்து வரும் படங்களிலும் இதே கண்டிஷனோடு தான் நடித்து வருகிறாராம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...