’ஹர ஹர மஹாதேவகி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தோஷ் பி.ஜெயக்குமார், தனது முதல் படத்திலேயே ஏகப்பட்டோர்களின் விமர்சனத்தை எதிர்க்கொண்டாலும், சினிமா வியாபாரிகளால் பெரிதும் பாராட்டப் பட்டார். காரணம், அப்படம் வாரி கொடுத்த வசூல் தான்.
’ஹர ஹர மஹாதேவகி’ படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், இயக்குநர் சந்தோஷுக்கு அட்வான்ஸ் கொடுத்து மீண்டும் ஒரு குஜால் படத்தை இயக்க கேட்டுக்கொண்டதன் பேரில் உருவான படம் தான் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ தலைப்பு மட்டும் அல்ல முழு படத்தையும் ரொம்ப குஜாலாக இயக்கியிருந்த சந்தோஷுக்கு, முதல் படத்தை காட்டிலும் இப்படத்திற்கு எதிர்ப்புகள் ரொம்ப பலமாக இருந்தாலும், அதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை. அவர் மட்டும் அல்ல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜவும் தான்.
இருந்தாலும், இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாருக்கு ஆபாச பட இயக்குநர் என்ற இமேஜ் வந்துவிட்டதால் அவர் சற்று அப்செட்டாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அசராத ஞானவேல்ராஜா, குத்து படம் கொடுத்த லாபத்தால் குஷியடைந்ததோடு, மீண்டும் அப்படி ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தையும் சந்தோஷை வைத்தே எடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பவர், சந்தோஷை வளைப்பதற்காக அவருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறாராம்.
தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்கும் ஞானவேல்ராஜா, அப்படத்திற்கு பிறகு குஜால் படம் தயாரிக்கலாம் என்று கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...